செந்தமிழ்க்கல்லூரி,மதுரை நான்காம் தமிழ்ச்சங்கம்

தமிழ், தமிழ்மொழி, தமிழ் இலக்கியம், வளர்ப்பது நான்காம் தமிழ்ச்சங்கம் , செந்தமிழ்க்கல்லூரி அதன் ஓர் அங்கம்
ஒரு நூற்றாண்டுக்கும் மேலாகத் தமிழ், தமிழ்மொழி, தமிழ் இலக்கியம், வளர்ப்பது,செந்தமிழ் என்னும் இலக்கிய இதழை 1902 முதல் தொடர்ந்து நடத்தி வருவது நான்காம் தமிழ்ச்சங்கம், செந்தமிழ்க்கல்லூரி , அதன் ஓர் அங்கம்

புதன், 15 ஆகஸ்ட், 2012

66-ஆவது சுதந்திர தின விழா நிகழ்ச்சிகள்



மதுரைத் தமிழ்ச்சங்கம் செந்தமிழ்க்கல்லூரியில் 
66 ஆவது சுதந்திர தின விழா 
சுதந்திர தின விழா அழைப்பிதழ்
மதுரைத் தமிழ்ச்சங்கம் செந்தமிழ்க்கல்லூரியில் 66 ஆவது இந்திய சுதந்திர தின விழா 15-08-2012 புதன்கிழமை காலை 09 மணியளவில் கல்லூரி வளாகத்தில் கொண்டாடப்பட்டது. மதுரைத் தமிழ்ச்சங்கம் செந்தமிழ்க்கல்லூரியின் முதல்வர்(பொ) மு.மீனா அவர்கள் விழாவிற்கு வருகை புரிந்த அனைவரையும் இன்முகத்துடன் வரவேற்றார். செந்தமிழ்க் கல்லூரிச் செயலரும், தமிழக அனைத்துத் தமிழ்ச் சங்கங்களின் கூட்டமைப்புத் தலைவரும் ஆகிய திருமிகு கோச்சடை இரா.குருசாமி பி.ஏ., அவர்கள் தேசியக் கொடியினையேற்றினார்கள். தமிழ்ச்சங்கச் செயலர் திருமிகு இரா.அழகுமலை எம்.ஏ.,எம்ஃபில்., அவர்கள் இந்நிகழ்விற்குத்  தலைமை வகித்தார்கள். செந்தமிழ்க்கல்லூரி ஆட்சிக் குழு உறுப்பினர்கள் திருமிகு க.முத்தையாபசும்பொன், வழக்கறிஞர், அவர்கள், திருமிகு சு.வீரணசாமி வழக்கறிஞர், அவர்கள், முனைவர் க.சின்னப்பா, முதன்மையர், கல்லூரிப் பேராசிரியர்கள், அலுவலர்கள் மற்றும்பலர் திரளாகக் கலந்து கொண்டனர். செந்தமிழ்க்கல்லூரி மாணவர்களின் இனிய கலைநிகழ்ச்சிகளும் இடம்பெற்றன. செந்தமிழ்க்கல்லூரி மாணவர்களும், பொதுமக்களும், தமிழ் ஆர்வலர்களும் திரளாகக் கலந்து கொண்டனர்.

திங்கள், 30 ஜூலை, 2012

மதுரைத் தமிழ்ச் சங்கம் செந்தமிழ்க் கல்லூரியில்

மதுரைத் தமிழ்ச் சங்கம்
  
 செந்தமிழ்க் கல்லூரியில் 

மகாவித்வான் மு.இராகவ அய்யங்காரின் 

நினைவு அறக்கட்டளைச் சொற்பொழிவு
மதுரைத் தமிழ்ச் சங்கம்  செந்தமிழ்க் கல்லூரியில் மகாவித்வான் மு.இராகவ அய்யங்காரின் நினைவு அறக்கட்டளைச் சொற்பொழிவு 26-07-2012 வியாழக்கிழமை அன்று காலை 11.00 மணிக்கு இறை வணக்கத்துடன் தொடங்கியது. 

இவ் அறக்கட்டளைச் சொற்பொழிவிற்குத் தமிழ்ச்சங்கங்களின் கூட்டமைப்புத்  தலைவரும், செந்தமிழ்க்கல்லூரிச் செயலருமாகிய திருமிகு கோச்சடை இரா.குருசாமி பி.ஏ., அவர்கள் தலைமை உரையாற்றினார்கள். அப்போது மகாவித்வான் மு.இராகவைய்யங்காரின் அரும்பணிகளை எடுத்துரைத்தார்கள். மதுரைத் தமிழ்ச்சங்கச் செயலர் திருமிகு இரா.அழகுமலை எம்.ஏ.,எம்ஃபில்., அவர்கள் முன்னிலை வகித்து, மதுரைத் தமிழ்ச்சங்கத்தில் மகாவித்வான் மு.இராகவைய்யங்காரின் தமிழ்ப்பணியின் மேன்மையை இன்றைய மாணவர்கள் அறிந்து நற்பண்புகளை வளர்த்துக் கொள்வதோடு தமிழ்ப்பணி ஆற்றும் எண்ணம் இன்றைய மாண்வர்களிடம் வளரவேண்டும் என்று கேட்டுக் கொண்டார். மதுரை நான்காம் தமிழ்ச்சங்கம் ஏற்பாடு செய்திருந்த அறக்கட்டளைச் சொற்பொழிவிற்கு வருகைபுரிந்த அனைவரையும் செந்தமிழ்க்கல்லூரி முதல்வர்(பொ) மு.மீனா அவர்கள் இன்முகத்துடன் வரவேற்று சிறந்ததொரு வரவேற்புரை நல்கினார். ஸ்ரீகாஞ்சி காமகோடி பீட ஆஸ்தானப் புலவர் திருச்சி கை. கல்யாணராமன் அவர்கள் நெஞ்சத்தை நெகிழ்விக்கும் சந்திப்பு என்னும் தலைப்பில் சொற்பொழிவு நிகழ்த்தினார்கள். செந்தமிழ்க் கல்லூரி மாணவர்களும், தமிழ் ஆர்வலர்களும், பிற கல்லூரித் தமிழ்ப் பேராசிரியர்களும் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

திங்கள், 23 ஜூலை, 2012

மதுரை செந்தமிழ்க் கல்லூரியில் பல்வகைச் சான்றிதழ் வகுப்புக்கள் தொடக்க விழா


   மதுரை செந்தமிழ்க் கல்லூரியில் பல்வகைச் சான்றிதழ் வகுப்புக்கள் தொடக்க விழா 23-07-2012 திங்கட்கிழமை அன்று இறை வணக்கத்துடன் தொடங்கியது.

 
1. தமிழ்க் கற்பித்தல் 2. போட்டித் தமிழ் 3. போட்டித் தேர்வுகளுக்கான ஆங்கிலம்
4. காந்தியச் சிந்தனை பட்டயச் சான்றிதழ்     5. காந்தியச் சிந்தனை சான்றிதழ் வகுப்பு
6. ஓலைச்சுவடி மற்றும் கல்வெட்டியல்          7. யோகா மற்றும் தியானம்
8. சமஸ்கிருதம்      9. இதழியல்    10. வலைப்பூ                        11. கணினிப் பயன்பாடு சான்றிதழ் வகுப்பு 12. கணினிப் பயன்பாடு பட்டய வகுப்பு ஆகிய பல்வகைச் சான்றிதழ் வகுப்புகள் செந்தமிழ்க் கல்லூரியில் தொடங்கப் பட்டன.
 
  செந்தமிழ்க் கல்லூரிச் செயலரும், தமிழக அனைத்துத் தமிழ்ச் சங்கங்களின் கூட்டமைப்புத் தலைவரும் ஆகிய திருமிகு கோச்சடை இரா.குருசாமி பி.ஏ., அவர்கள் தலைமையுரை வழங்கினார்கள். மதுரைத் தமிழ்ச்சங்கச் செயலர் திருமிகு இரா.அழகுமலை எம்.ஏ.,எம்ஃபில்., அவர்கள் முன்னிலை வ்கித்தார்கள். 


இவ்விழாவில் மதுரை காமராசர்  பல்கலைக்கழக ஆட்சிக்குழு உறுப்பினர்  முதுமுனைவர் இரா.கண்ணன் அவர்கள் வகுப்புகளைத் தொடங்கி வைத்துச் சிறப்புரையாற்றினார்.  மதுரைத் தமிழ்ச்சங்க ஆட்சிக்குழு உறுப்பினர் திருமிகு க.முத்தையா பசும்பொன்,பி.ஏ.,பி.எல்., செந்தமிழ்க் கல்லூரி முதன்மையர் முனைவர் க.சின்னப்பா ஆகியோர் வாழ்த்துரை வழங்கினார்கள்.
        
 மதுரை செந்தமிழ்க் கல்லூரி முதல்வர் (பொறுப்பு) முனைவர் மு.மீனா அவர்கள் விழாவிற்கு வந்த அனைவரையும் வரவேற்றார் . 
   இளங்கலை மூன்றாமாண்டு மாணவி இரா.விக்னேசுவரி  நன்றியுரை கூறினார். விழா நிகழ்வுகளை உதவிப்பேராசிரியர் முனைவர் செ.இராஜமோகன் தொகுத்து வழங்கினார்.

சனி, 14 ஜூலை, 2012

செந்தமிழ்க் கல்லூரியில் பெற்றோர் ஆசிரியர் சங்க நல்லிணக்க அமைப்பு


செந்தமிழ்க் கல்லூரியில் பெற்றோர் ஆசிரியர் சங்க
 நல்லிணக்க அமைப்பு
செந்தமிழ்க் கல்லூரியில் பெற்றோர் ஆசிரியர் சங்க நல்லிணக்க அமைப்பு ஏற்பாடு செய்த முதலாம் ஆண்டு மாணவர்கட்கான வரவேற்பும் அறிமுக விழாவும் 05-07-2012 அன்று வியாழக்கிழமை இறை வணக்கத்துடன் தொடங்கியது. செந்தமிழ்க் கல்லூரிச் செயலரும், தமிழக அனைத்துத் தமிழ்ச் சங்கங்களின் கூட்டமைப்புத் தலைவரும் ஆகிய திருமிகு இரா.குருசாமி அவர்கள் தலைமையுரை வழங்கினார்கள். 
முதலாம் ஆண்டு மாணவர்கட்கான வரவேற்பும் அறிமுகவிழாவும்
 மதுரைத் தமிழ்ச்சங்கச் செயலர் திருமிகு இரா.அழகுமலை அவர்கள் முன்னிலை வ்கித்தார்கள். 2012-2013 ஆம் கல்வியாண்டில் முதலாம் ஆண்டு சேர்ந்துள்ள மாணவர்கட்கான வகுப்புக்களைத் தொடங்கி வைத்துச் சிறப்புரையினைத் மதுரை திலகர் திடல் காவல்துறை ஆய்வாள்ர் திருமிகு வே.சீனிவாசன் அவர்கள் வழங்கினார்கள். கல்லூரி ஆட்சிக் குழு உறுப்பினர் திருமிகு க.முத்தையாபசும்பொன் அவர்கள் வாழ்த்துரை வழங்கினார்கள் மதுரை செந்தமிழ்க் கல்லூரி முதல்வர் (பொறுப்பு) முனைவர் மு.மீனா அவர்கள் வரவேற்புரை நல்கினார்கள்.

மதுரை செந்தமிழ்க் கல்லூரியில் சிறப்புக் கருத்தரங்கம்


மதுரை செந்தமிழ்க் கல்லூரியில் 22-06-2012 அன்று வெள்ளிக்கிழமை வள்ளல்.பொன்.பாண்டித்துரைத்தேவர் அருள் வளாகத்தில் இறை வணக்கத்துடன் மாணவர்கட்கான 2012-2013 ஆம் கல்வியாண்டின் சிறப்புக் கருத்தரங்கம் நடைபெற்றது. 
கருத்தரங்க அழைப்பிதழ்

செந்தமிழ்க் கல்லூரிச் செயலரும், தமிழக அனைத்துத் தமிழ்ச் சங்கங்களின் கூட்டமைப்புத் தலைவரும் ஆகிய திருமிகு இரா.குருசாமி அவர்கள் தலைமையுரை வழங்கினார்கள். தமிழ்ச்சங்கச் செயலர் திருமிகு இரா.அழகுமலை அவர்கள் முன்னிலை வகித்தார். மாணவர்கட்கான சிறப்புக் கருத்தரங்கில் கலைமாமணி திரு.கூத்தபிரான் (வானொலி அண்ணா) அவர்கள் இளைஞர்கள் எதிர்கொள்ளும் சிக்கல்களும் எளிய தீர்வுகளும் என்னும் தலைப்பில் சிறப்புரையினை வழங்கினார். செந்தமிழ்க் கல்லூரி முதல்வர் (பொறுப்பு) முனைவர் மு.மீனா அவர்கள் நன்றியுரை வழங்கினார். அனைத்து மாணவர்களும் கலந்து கொண்டு பயன் அடைந்தனர்.

ஞாயிறு, 27 மே, 2012

மதுரைத் தமிழ்ச்சங்கம் செந்தமிழ்க்கல்லூரியில் 55 ஆம் பட்டமளிப்பு விழா

மதுரைத் தமிழ்ச்சங்கம் செந்தமிழ்க்கல்லூரியில் 55 ஆம் பட்டமளிப்பு விழா
  
   மதுரைத் தமிழ்ச்சங்கம் செந்தமிழ்க்கல்லூரியில் 55 ஆம் பட்டமளிப்பு விழா 27-05-2012 ஞாயிற்றுக்கிழமை காலை 11 மணிக்குத் தொடங்கி மதுரை நான்காம் தமிழ்ச்சங்கத்தைத் தோற்றுவித்த பாண்டித்துரைத்தேவர் அருள்  வளாகத்தில் நடைபெற்றது.. மதுரைத் தமிழ்ச்சங்கம் செந்தமிழ்க்கல்லூரியில் 55 ஆம் பட்டமளிப்பு விழாவிற்கு வருகைபுரிந்த அனைவரையும் இன்முகத்துடன் வரவேற்ற செந்தமிழ்க்கல்லூரி முதல்வர்(பொ) மு.மீனா அவர்கள் சிறந்ததொரு வரவேற்புரை நல்கினார்.


 
        
 
 




இவ்விழாவிற்குத் தமிழ்ச்சங்கங்களின் கூட்டமைப்புத்  தலைவரும், செந்தமிழ்க்கல்லூரிச் செயலருமாகிய திருமிகு கோச்சடை இரா.குருசாமி அவர்கள் தலைமை உரையாற்றினார். அப்போது பட்டம் பெறும் மாணவர்கள் தங்கள் பெற்றோர்களை மதிக்கக்கூடியவர்களாகவும், எதிர்காலத்தில் நல்ல பண்பாளராகவும் திகழ வேண்டும் எனக் கூறினார்கள்.மதுரைத் தமிழ்ச்சங்கச் செயலர் திருமிகு இரா.அழகுமலை எம்.ஏ.,எம்ஃபில்., அவர்கள் முன்னிலை வகித்து, மதுரைத் தமிழ்ச்சங்கம் மற்றும் செந்தமிழ்க்கல்லூரியின் நோக்கங்களைக் கூறி உரையாற்றினார்.  
சென்னை உயர்நீதிமன்ற நீதியரசர் மாண்புமிகு திருமிகு எஸ்.விமலா அவர்கள் பட்டமளிப்பு விழாப் பேருரையினை வழங்கினார்கள். அவர் தம் உரையில் தமிழ்மொழி, இலக்கியங்களைப் படிப்பதின் பெருமையினை எடுத்துரைத்தார்கள். நல்ல பண்புகளையும், நீதிக் கருத்துக்களையும் கொண்டுள்ள தமிழ்மொழி, இலக்கியங்கள் தமிழ்ப்பண்பாட்டினை வளர்க்கும்.இதனைக் கருத்தில் கொண்டே மேலை நாடுகளில் தமிழ்மொழி, இலக்கியங்களைக் கல்வி நிலையங்களில் கட்டாயம் ஒரு மணிநேரம் கற்றுத்தர வேண்டும் என்று கூறி வருகின்றனர்.  மத்திய அரசின் தேர்வாணையம் வழி எழுதும் . தேர்வுகளில் மாணவர்கள் தமிழ்மொழியினைத் தெரிவு செய்து அதிக எண்ணிக்கையில் வெற்றி பெற்று உயர்பதவிகளைத் தற்போது பெற்று வருகின்றனர். அதனால் தமிழ்மொழியின் பெருமையும் சிறப்பும் பெருகி வருகின்றது என்று கூறினார். 
 சென்னை உயர்நீதிமன்ற வழக்கறிஞர் தமிழ் மன்றச் செயலாளர் திரு.சு.முத்துக்கிருஷ்ணன் அவர்கள் வாழ்த்துரை வழங்கினார். மதுரைத் தமிழ்ச்சங்கத்தின் ஆட்சிக்குழு உறுப்பினர் சு.வீரணசாமி அவர்கள் செந்தமிழ்க்கல்லூரியின் சேவைகளைக்கூறி வாழ்த்துரை வழங்கினார். மதுரைத் தமிழ்ச்சங்கத்தின் ஆட்சிக்குழு உறுப்பினர் திரு.க.முத்தையா பசும்பொன் அவர்கள் நன்றியுரை வழங்கினார். முனைவர் க.சின்னப்பா, முதன்மையர், 55 ஆம் பட்டமளிப்பு விழாவின் நிகழ்வுகளைத் தொகுத்து வழங்கினார்.

வியாழன், 12 ஏப்ரல், 2012

தமிழ்நாளிதழ்கள் புகழாரம் - மதுரைத் தமிழ்ச்சங்கம் பெறும் ”தமிழ்த்தாய் விருது”


தமிழ் நாளிதழ்கள் புகழாரம் - செய்திகள் வெளியீடு
 ”தமிழ்த்தாய் விருது”  பெறும் மதுரைத் தமிழ்ச்சங்கம்

தமிழ் நந்தன வருடம்  சித்திரையின் முத்திரை அறிவிப்பு 
மதுரைத் தமிழ்ச்சங்கத்துக்கு   
  தமிழ்த்தாய் விருது -
 

 மனம் நிறைந்த பாராட்டுக்கள் 


அன்புடன்

   முனைவர் மு முத்தையா

 முனைவர் மு மீனாமுத்தையா
 


 ”இந்த விருதினைப் பெறும் மதுரைத் தமிழ்ச்சங்கத்திற்கு விருதுத் தொகையாக ஐந்து இலட்சம் ரூபாயும்,கேடயம் மற்றும் பாராட்டுச் சான்றிதழும் வழங்கப் படும். இப்பெருமை குறித்துத் தமிழகத்தில் இருந்துவெளிவரும் தமிழ்நாளிதழ்கள் மதுரைத் தமிழ்ச் சங்கத்தின் தமிழ்ப்பணி குறித்துப் புகழாரம் சூட்டியுள்ளன”   
நன்றி: தினமலர் நாளிதழ் -10-04- 2012 தமிழக முதல்வர் தமிழ்ப் புத்தாண்டில் வழங்கும் தமிழ்த்தாய் விருது
 



 நன்றி: தினமலர் நாளிதழ் -10-04- 2012தமிழக முதல்வர் தமிழ்ப் புத்தாண்டில் வழங்கும் தமிழ்த்தாய் விருது
தமிழ்நாட்டரசின் ஆணையின்படித் தமிழுக்கு நற்தொண்டாற்றிய மதுரைத் தமிழ்ச் சங்கத்திற்கு தமிழ்த்தாய் விருது வழங்கப்படுகின்றது. இவ்விருதினைத் தமிழக முதலமைச்சர் மாண்புமிகு ஜெ.ஜெயலலிதா அவர்கள் தமிழ்ப் புத்தாண்டில் 13-04-2012 அன்று நடைபெறும் அரசு விழாவில் இந்த ஆண்டிற்கான தமிழ்த்தாய் விருதினை வழங்குகிறார்.

நன்றி: தினமலர் நாளிதழ் -10-04-2012 
தமிழக முதல்வர் தமிழ்ப் புத்தாண்டில் வழங்கும் தமிழ்த்தாய் விருது


நன்றி: மாலைமுரசு நாளிதழ் -12-04-2012


நன்றி: நமது எம்.ஜி.ஆர். நாளிதழ் -11-04-2012 
தமிழக முதல்வர் தமிழ்ப் புத்தாண்டில் வழங்கும் தமிழ்த்தாய் விருது
நன்றி: மாலைமுரசு நாளிதழ்-
சென்னைப் பதிப்பு -11-04-2012 
தமிழக முதல்வர் தமிழ்ப் புத்தாண்டில் வழங்கும் தமிழ்த்தாய் விருது
நன்றி: மாலைமுரசு நாளிதழ்-
சென்னைப் பதிப்பு -11-04-2012 
தமிழக முதல்வர் தமிழ்ப் புத்தாண்டில் வழங்கும் தமிழ்த்தாய் விருது


நன்றி:
தினத்தந்தி
மதுரைப்பதிப்பு-11.04.2012
தமிழ்த்தாய் விருது


நன்றி: தினமணி நாளிதழ் -12-04-2012 
தமிழ்ச்சங்கத்துக்குத் தமிழக முதல்வரின் முதல் மரியாதை - தமிழ்ப் புத்தாண்டில் வழங்கும் தமிழ்த்தாய் விருது



செவ்வாய், 10 ஏப்ரல், 2012

மதுரைத் தமிழ்ச் சங்கத்துக்கு ”தமிழ்த்தாய் விருது”

தமிழுக்கும் தமிழர்களுக்கும் பெருமை

மதுரைத் தமிழ்ச்சங்கம் செந்தமிழ்க் கல்லூரிச் செயலாளர் மற்றும் தமிழகத் தமிழ்ச்சங்கங்களின் கூட்டமைப்புத் தலைவர் திருமிகு.கோச்சடை இரா.குருசாமி அவர்கள்

 தமிழக முதல்வர் தமிழ்ப் புத்தாண்டில் 
வழங்கும் “தமிழ்த்தாய் விருது
தமிழ்த் தொண்டிற்கு ஓர் அங்கீகாரம்
  தமிழக அரசு தமிழுக்கு நற்தொண்டாற்றிய ஓர் அமைப்பிற்குத் தமிழ்த்தாய் விருது வழங்கவும் தமிழக முதலமைச்சர் மாண்புமிகு ஜெ.ஜெயலலிதா அவர்கள் உத்தரவிட்டு இருந்தார். இந்த ஆண்டிற்கான தமிழ்த்தாய் விருது மதுரைத் தமிழ்ச் சங்கத்திற்கு வழங்கப்படுகிறது. இந்த விருதினைப் பெறும் மதுரைத் தமிழ்ச்சங்கத்திற்கு விருதுத் தொகையாக ஐந்து இலட்சம் ரூபாயும், கேடயம் மற்றும் பாராட்டுச் சான்றிதழும் தமிழ்ப்புத்தாண்டு  விழாவில் 13-04-2012 அன்று வழங்கப் பட இருக்கிறது. இவ்விருதினைத் தமிழக முதல்வர் மாண்புமிகு ஜெ.ஜெயலலிதா அவர்கள் வழங்குகிறார்கள்.

”தமிழ்த்தாய்” விருது பெறும்
 மதுரைத் தமிழ்ச் சங்கம்
 தமிழ்மொழியின் பெருமையையும், தமிழ் இலக்கியங்களின் தனிச் சிறப்பையும் தமிழ்கூறும் நல்லுலகில் திறம்படச் செயல்படுத்த வேண்டும் என்ற நோக்கத்துடனும், எல்லார்க்கும் தமிழின் மேன்மையை அடையச் செய்ய வேண்டும் என்ற இலட்சியத்துடனும் வள்ளல். பொன்.பாண்டித்துரைத்தேவர் அவர்கள் மதுரையில் நான்காம் தமிழ்ச் சங்கத்தை 1901-இல் நிறுவினார்கள்.

திருவள்ளுவராண்டு 2042 கார்த்திகைத் திங்கள் 16ஆம் நாள் வெள்ளிக்கிழமையன்று, மதுரை நான்காம் தமிழ்ச்சங்கத்து நிறுவனர், சிவநெறிச்செல்வர், பாலவநத்தத்துப் பேராண்ட மாமன்னர், வள்ளல் பொன். பாண்டித்துரைத் தேவரவர்களின் நூற்றாண்டு நினைவுப் பெருவிழா நடைபெற்றது. திருவாவடுதுறை ஆதீனம், தருமை ஆதீனம், மதுரை ஆதீனம், திருப்பனந்தாள் ஆதீனம், காமாட்சிபுரி ஆதீனம் ஆகிய ஆதீனங்களைச் சார்ந்த குருமகா சன்னிதானங்கள் கலந்து கொண்டு தமிழுக்கெனவே செயல்படும் மதுரை நான்காம் தமிழ்ச்சங்கம் மற்றும் செந்தமிழ்க் கல்லூரியின் சேவைகளை விரிவாக எடுத்துரைத்தார்கள்

மதுரை நான்காம் தமிழ்ச்சங்கத் தலைவர் மாட்சிமை தங்கிய மன்னர் நா.குமரன்சேதுபதி அவர்கள், மதுரைத் தமிழ்ச்சங்கச் செயலர் திருமிகு இரா.அழகுமலை அவர்கள், செந்தமிழ்க் கல்லூரிச் செயலாளர் திருமிகு.கோச்சடை இரா.குருசாமி அவர்கள், செந்தமிழ்க் கல்லூரி முதன்மையர் முனைவர் க.சின்னப்பா அவர்கள், மதுரைத் தமிழ்ச்சங்க ஆட்சிப் பேரவை உறுப்பினர்கள் திரு.க.முத்தையாபசும்பொன் அவர்கள், திரு சு. வீரணசாமி அவர்கள் ஆகியோர்களால் மதுரை நான்காம் தமிழ்ச்சங்கத்து நிறுவனர்க்குப் பெருமை சேர்க்கும் வகையில் நூற்றாண்டு விழாக் கொண்டாடப்பட்டது. இத்தகைய பெருமைக்குரிய ஆண்டில் ”தமிழ்த்தாய் விருது” கிடைத்திருப்பது சிறப்புக்குரிய ஒன்றாகக் கருதப்படுகிறது.   
செந்தமிழ்க் கல்லூரிச் செயலாளர் திருமிகு.கோச்சடை இரா.குருசாமி அவர்கள்
தரணி போற்றும் மாமதுரையில் தமிழ் மொழி, இலக்கிய வளர்ச்சி ஒன்றை மட்டுமே தங்கள் நிறுவனத்தின் குறிக்கோளாகக் கொண்டு மதுரைத் தமிழ்ச்சங்கம் மற்றும் அதன் ஓர் அங்கமாகச் செந்தமிழ்க்கல்லூரியும் செயல்பட்டுத் தொடர்ந்து தமிழ்ச் சேவைகள் புரிந்து வருகின்றன.

 செந்தமிழ்க் கல்லூரி மாணவர்களுக்கு மட்டுமல்லாது பிற பல்கலைக்கழகம், மற்றும் பிற கல்லூரி மாணவர்களின் ஆய்வுத்திறனை மேம்படுத்தும் சேவை நோக்கில் செந்தமிழ்க் கல்லூரியில் உள்ள பாண்டியன் நூலகத்தில்  33200 நூல்களும் 35 இதழ்களும் மதுரைத் தமிழ்ச்சங்க நூலகத்தில் 14033 நூல்களும் பெரிதும் பயனுடையதாகப் பராமரிக்கப்பட்டு வருகின்றன. இவை தவிர 1135 முனைவர் மற்றும் எம்ஃபில் பட்ட ஆய்வேடுகளும், 260 அரிய ஓலைச்சுவடிகளும் பாதுகாக்கப்பட்டு வருகின்றன.

 அறக்கட்டளைகளை நிறுவியும், அரிய நூல்களைப் பதிப்பித்தும், தமிழாய்வுகளைத் முதல் தர நிலையில் பேணிப் பாதுகாத்தும் வரும் மதுரைத் தமிழ்ச்சங்கத்தின் பங்கும் பணியும் இத்தருணத்தில் மேலும் சிறப்புக்குரியன.

திங்கள், 2 ஏப்ரல், 2012

மதுரை செந்தமிழ்க்கல்லூரியில் மடிக்கணினி வழங்கும் விழா

மதுரை செந்தமிழ்க்கல்லூரியில் தமிழக அரசின் விலையில்லா மடிக்கணினி வழங்கும் விழா நடைபெறுகிறது.கணினி  வழித் தமிழ்க்கல்வி பரவும் வகை செய்ய வாழ்த்துவோம்
வாருங்களேன்!!
 
செந்தமிழ்க் கல்லூரியில் மடிக்கணினி வழங்கும் விழா அழைப்பிதழ்
         செந்தமிழ்க் கல்லூரியில் தமிழக அரசின் விலையில்லா மடிக்கணினி வழங்கும் விழா 03-04-2012 செவ்வாய்க்கிழமை அன்று மாலை 3.00 மணிக்கு  நடைபெறுகிறது. இவ்விழாவில் செந்தமிழ்க்கல்லூரி முதன்மையர் முனைவர் க,சின்னப்பா வரவேற்புரையாற்றுகிறார். செந்தமிழ்க் கல்லூரிச் செயலாளர் திருமிகு கோச்சடை இரா.குருசாமி தலைமை வகிக்கிறார்கள். ம்துரை நான்காம் தமிழ்ச்சங்கச் செயலாளர் திருமிகு  இரா.அழகுமலை அவர்கள் முன்னிலை வகிக்கிறார்கள். மதுரை, தனித்துணை ஆட்சியர் (முத்திரைத்தாள்) திருமிகு அ.சங்கர் எம்.எஸ்சி., அவர்கள் மடிக்கணினியினைச் செந்தமிழ்க் கல்லூரி மாணவர்களுக்கு வழங்குகிறார்கள். செந்தமிழ்க் கல்லூரியின் முதல்வர்(பொ) முனைவர் மு.மீனா நன்றியுரை வழங்குகிறார்கள். செந்தமிழ்க் கல்லூரியின் ஆட்சிக்குழு உறுப்பினர்கள், பேராசிரியர், பேராசிரியைகள்,அலுவலக நிர்வாகிகள் மற்றும் அனைத்து மாணவ,மாணவியர்களும் கலந்து கொள்கிறார்கள்.

ஞாயிறு, 1 ஏப்ரல், 2012

செந்தமிழ்க்கல்லூரி மாணவன் சாதனை

செந்தமிழ்க்கல்லூரியில் மாற்றுத்திறனுடயோர் நலக் குழு 

      மதுரை செந்தமிழ்க்கல்லூரியில் தமிழ்ப் பட்ட வகுப்புகள் 1957 ஆம் ஆண்டிலிருந்து நடத்தப்பட்டு வருகின்றன. 2005-2008 இல் இக்கல்லூரியில்  மாணவன் செல்வன் கா.சரவணபாண்டி பி.லிட் தமிழ் இளம் இலக்கியம் மூன்றாண்டுகள் பயின்று சிறந்த மதிப்பெண்களுடன் தேர்ச்சி பெற்றார். 2009 - 2011 இல்  முதுகலைத் (எம்.ஏ.,) தமிழ்ப்பட்ட வகுப்பில் பல்கலைக்கழக அளவில் முதல் மாணவராகத் தகுதி பெற்று தங்கப் பதக்கம் (Gold Medal) பரிசினை மதுரை காமராசர் பல்கலைக் கழகப் பட்டமளிப்பு விழாவில் தமிழக  மேதகு ஆளுநர் ரோசய்யா அவர்களிடமிருந்து பெற்றுள்ளார்.

         மதுரை செந்தமிழ்க்கல்லூரியில் பயின்ற முதுகலைத் (எம்.ஏ.,) தமிழ்ப்பட்ட வகுப்பு மாணவர் செல்வன் கா.சரவணபாண்டி பல்கலைக்கழக அளவில் முதல் மாணவராகத் தகுதி பெற்று தங்கப் பதக்கம் (Gold Medal) பரிசினை 28-03-2012 அன்று மதுரை காமராசர் பல்கலைக் கழகத்தில் நடைபெற்ற பட்டமளிப்பு விழாவில் தமிழக கவர்னர் திருமிகு ரோசய்யா அவர்களிடமிருந்து பெறும் காட்சி.

  
 மதுரை  செந்தமிழ்க்கல்லூரி 
மாணவன்  
   செல்வன் கா.சரவணபாண்டி சாதனை

        
    மதுரை செந்தமிழ்க்கல்லூரியில் மாற்றுத்திறனுடயோர் நலக் குழு செயல்பட்டு (Otherwise Able Person's Welfare Committee) வருகின்றது.பார்வையற்ற இம்மன்ற மாணவர் பெற்ற சாதனைக்கு வாழ்த்துக்கள். இம்மன்ற மாணவ, மாணவிகளுக்கு உதவி செய்து வரும் மாணவத் தன்னார்வத் தொண்டர்களின் சேவைக்கும் மனம் நிறைந்த பாராட்டுக்கள்.