செந்தமிழ்க்கல்லூரி,மதுரை நான்காம் தமிழ்ச்சங்கம்

தமிழ், தமிழ்மொழி, தமிழ் இலக்கியம், வளர்ப்பது நான்காம் தமிழ்ச்சங்கம் , செந்தமிழ்க்கல்லூரி அதன் ஓர் அங்கம்
ஒரு நூற்றாண்டுக்கும் மேலாகத் தமிழ், தமிழ்மொழி, தமிழ் இலக்கியம், வளர்ப்பது,செந்தமிழ் என்னும் இலக்கிய இதழை 1902 முதல் தொடர்ந்து நடத்தி வருவது நான்காம் தமிழ்ச்சங்கம், செந்தமிழ்க்கல்லூரி , அதன் ஓர் அங்கம்

திங்கள், 23 ஜூலை, 2012

மதுரை செந்தமிழ்க் கல்லூரியில் பல்வகைச் சான்றிதழ் வகுப்புக்கள் தொடக்க விழா


   மதுரை செந்தமிழ்க் கல்லூரியில் பல்வகைச் சான்றிதழ் வகுப்புக்கள் தொடக்க விழா 23-07-2012 திங்கட்கிழமை அன்று இறை வணக்கத்துடன் தொடங்கியது.

 
1. தமிழ்க் கற்பித்தல் 2. போட்டித் தமிழ் 3. போட்டித் தேர்வுகளுக்கான ஆங்கிலம்
4. காந்தியச் சிந்தனை பட்டயச் சான்றிதழ்     5. காந்தியச் சிந்தனை சான்றிதழ் வகுப்பு
6. ஓலைச்சுவடி மற்றும் கல்வெட்டியல்          7. யோகா மற்றும் தியானம்
8. சமஸ்கிருதம்      9. இதழியல்    10. வலைப்பூ                        11. கணினிப் பயன்பாடு சான்றிதழ் வகுப்பு 12. கணினிப் பயன்பாடு பட்டய வகுப்பு ஆகிய பல்வகைச் சான்றிதழ் வகுப்புகள் செந்தமிழ்க் கல்லூரியில் தொடங்கப் பட்டன.
 
  செந்தமிழ்க் கல்லூரிச் செயலரும், தமிழக அனைத்துத் தமிழ்ச் சங்கங்களின் கூட்டமைப்புத் தலைவரும் ஆகிய திருமிகு கோச்சடை இரா.குருசாமி பி.ஏ., அவர்கள் தலைமையுரை வழங்கினார்கள். மதுரைத் தமிழ்ச்சங்கச் செயலர் திருமிகு இரா.அழகுமலை எம்.ஏ.,எம்ஃபில்., அவர்கள் முன்னிலை வ்கித்தார்கள். 


இவ்விழாவில் மதுரை காமராசர்  பல்கலைக்கழக ஆட்சிக்குழு உறுப்பினர்  முதுமுனைவர் இரா.கண்ணன் அவர்கள் வகுப்புகளைத் தொடங்கி வைத்துச் சிறப்புரையாற்றினார்.  மதுரைத் தமிழ்ச்சங்க ஆட்சிக்குழு உறுப்பினர் திருமிகு க.முத்தையா பசும்பொன்,பி.ஏ.,பி.எல்., செந்தமிழ்க் கல்லூரி முதன்மையர் முனைவர் க.சின்னப்பா ஆகியோர் வாழ்த்துரை வழங்கினார்கள்.
        
 மதுரை செந்தமிழ்க் கல்லூரி முதல்வர் (பொறுப்பு) முனைவர் மு.மீனா அவர்கள் விழாவிற்கு வந்த அனைவரையும் வரவேற்றார் . 
   இளங்கலை மூன்றாமாண்டு மாணவி இரா.விக்னேசுவரி  நன்றியுரை கூறினார். விழா நிகழ்வுகளை உதவிப்பேராசிரியர் முனைவர் செ.இராஜமோகன் தொகுத்து வழங்கினார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக