செந்தமிழ்க்கல்லூரி,மதுரை நான்காம் தமிழ்ச்சங்கம்

தமிழ், தமிழ்மொழி, தமிழ் இலக்கியம், வளர்ப்பது நான்காம் தமிழ்ச்சங்கம் , செந்தமிழ்க்கல்லூரி அதன் ஓர் அங்கம்
ஒரு நூற்றாண்டுக்கும் மேலாகத் தமிழ், தமிழ்மொழி, தமிழ் இலக்கியம், வளர்ப்பது,செந்தமிழ் என்னும் இலக்கிய இதழை 1902 முதல் தொடர்ந்து நடத்தி வருவது நான்காம் தமிழ்ச்சங்கம், செந்தமிழ்க்கல்லூரி , அதன் ஓர் அங்கம்

ஞாயிறு, 1 ஏப்ரல், 2012

செந்தமிழ்க்கல்லூரி மாணவன் சாதனை

செந்தமிழ்க்கல்லூரியில் மாற்றுத்திறனுடயோர் நலக் குழு 

      மதுரை செந்தமிழ்க்கல்லூரியில் தமிழ்ப் பட்ட வகுப்புகள் 1957 ஆம் ஆண்டிலிருந்து நடத்தப்பட்டு வருகின்றன. 2005-2008 இல் இக்கல்லூரியில்  மாணவன் செல்வன் கா.சரவணபாண்டி பி.லிட் தமிழ் இளம் இலக்கியம் மூன்றாண்டுகள் பயின்று சிறந்த மதிப்பெண்களுடன் தேர்ச்சி பெற்றார். 2009 - 2011 இல்  முதுகலைத் (எம்.ஏ.,) தமிழ்ப்பட்ட வகுப்பில் பல்கலைக்கழக அளவில் முதல் மாணவராகத் தகுதி பெற்று தங்கப் பதக்கம் (Gold Medal) பரிசினை மதுரை காமராசர் பல்கலைக் கழகப் பட்டமளிப்பு விழாவில் தமிழக  மேதகு ஆளுநர் ரோசய்யா அவர்களிடமிருந்து பெற்றுள்ளார்.

         மதுரை செந்தமிழ்க்கல்லூரியில் பயின்ற முதுகலைத் (எம்.ஏ.,) தமிழ்ப்பட்ட வகுப்பு மாணவர் செல்வன் கா.சரவணபாண்டி பல்கலைக்கழக அளவில் முதல் மாணவராகத் தகுதி பெற்று தங்கப் பதக்கம் (Gold Medal) பரிசினை 28-03-2012 அன்று மதுரை காமராசர் பல்கலைக் கழகத்தில் நடைபெற்ற பட்டமளிப்பு விழாவில் தமிழக கவர்னர் திருமிகு ரோசய்யா அவர்களிடமிருந்து பெறும் காட்சி.

  
 மதுரை  செந்தமிழ்க்கல்லூரி 
மாணவன்  
   செல்வன் கா.சரவணபாண்டி சாதனை

        
    மதுரை செந்தமிழ்க்கல்லூரியில் மாற்றுத்திறனுடயோர் நலக் குழு செயல்பட்டு (Otherwise Able Person's Welfare Committee) வருகின்றது.பார்வையற்ற இம்மன்ற மாணவர் பெற்ற சாதனைக்கு வாழ்த்துக்கள். இம்மன்ற மாணவ, மாணவிகளுக்கு உதவி செய்து வரும் மாணவத் தன்னார்வத் தொண்டர்களின் சேவைக்கும் மனம் நிறைந்த பாராட்டுக்கள்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக