செந்தமிழ்க்கல்லூரி,மதுரை நான்காம் தமிழ்ச்சங்கம்

தமிழ், தமிழ்மொழி, தமிழ் இலக்கியம், வளர்ப்பது நான்காம் தமிழ்ச்சங்கம் , செந்தமிழ்க்கல்லூரி அதன் ஓர் அங்கம்
ஒரு நூற்றாண்டுக்கும் மேலாகத் தமிழ், தமிழ்மொழி, தமிழ் இலக்கியம், வளர்ப்பது,செந்தமிழ் என்னும் இலக்கிய இதழை 1902 முதல் தொடர்ந்து நடத்தி வருவது நான்காம் தமிழ்ச்சங்கம், செந்தமிழ்க்கல்லூரி , அதன் ஓர் அங்கம்

சனி, 14 ஜூலை, 2012

செந்தமிழ்க் கல்லூரியில் பெற்றோர் ஆசிரியர் சங்க நல்லிணக்க அமைப்பு


செந்தமிழ்க் கல்லூரியில் பெற்றோர் ஆசிரியர் சங்க
 நல்லிணக்க அமைப்பு
செந்தமிழ்க் கல்லூரியில் பெற்றோர் ஆசிரியர் சங்க நல்லிணக்க அமைப்பு ஏற்பாடு செய்த முதலாம் ஆண்டு மாணவர்கட்கான வரவேற்பும் அறிமுக விழாவும் 05-07-2012 அன்று வியாழக்கிழமை இறை வணக்கத்துடன் தொடங்கியது. செந்தமிழ்க் கல்லூரிச் செயலரும், தமிழக அனைத்துத் தமிழ்ச் சங்கங்களின் கூட்டமைப்புத் தலைவரும் ஆகிய திருமிகு இரா.குருசாமி அவர்கள் தலைமையுரை வழங்கினார்கள். 
முதலாம் ஆண்டு மாணவர்கட்கான வரவேற்பும் அறிமுகவிழாவும்
 மதுரைத் தமிழ்ச்சங்கச் செயலர் திருமிகு இரா.அழகுமலை அவர்கள் முன்னிலை வ்கித்தார்கள். 2012-2013 ஆம் கல்வியாண்டில் முதலாம் ஆண்டு சேர்ந்துள்ள மாணவர்கட்கான வகுப்புக்களைத் தொடங்கி வைத்துச் சிறப்புரையினைத் மதுரை திலகர் திடல் காவல்துறை ஆய்வாள்ர் திருமிகு வே.சீனிவாசன் அவர்கள் வழங்கினார்கள். கல்லூரி ஆட்சிக் குழு உறுப்பினர் திருமிகு க.முத்தையாபசும்பொன் அவர்கள் வாழ்த்துரை வழங்கினார்கள் மதுரை செந்தமிழ்க் கல்லூரி முதல்வர் (பொறுப்பு) முனைவர் மு.மீனா அவர்கள் வரவேற்புரை நல்கினார்கள்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக