செந்தமிழ்க்கல்லூரி,மதுரை நான்காம் தமிழ்ச்சங்கம்

தமிழ், தமிழ்மொழி, தமிழ் இலக்கியம், வளர்ப்பது நான்காம் தமிழ்ச்சங்கம் , செந்தமிழ்க்கல்லூரி அதன் ஓர் அங்கம்
ஒரு நூற்றாண்டுக்கும் மேலாகத் தமிழ், தமிழ்மொழி, தமிழ் இலக்கியம், வளர்ப்பது,செந்தமிழ் என்னும் இலக்கிய இதழை 1902 முதல் தொடர்ந்து நடத்தி வருவது நான்காம் தமிழ்ச்சங்கம், செந்தமிழ்க்கல்லூரி , அதன் ஓர் அங்கம்

செவ்வாய், 17 செப்டம்பர், 2013

மதுரை செந்தமிழ்க் கல்லூரியில் ஆசிரியர் தினவிழா


மதுரை தமிழ்ச் சங்கம், மதுரை செந்தமிழ்க் கல்லூரியில் ஆசிரியர் தினவிழாக் கொண்டாட்டம்
 
 
 


     
2013-14 ஆம் கல்வியாண்டின் செப்டம்பர் 5 ஆம் தேதியன்று செந்தமிழ்க் கல்லூரியில் ஆசிரியர் தினவிழாக் கோலாகலமாகக் கொண்டாடப்பட்டது. அப்பொழுது ஆசிரியப் பணியின் புனிதத்தையும், கடமை உணர்வையும், பொறுப்புக்களையும் கல்லூரிச் செயலர் திருமிகு கோச்சடை இரா.குருசாமி பி.ஏ., அவர்கள் எடுத்துரைத்தார்கள். மேலும், நற்பண்புகளுடன் கூடிய நல்ல மாணவ சமுதாயத்தை உருவாக்குவதில் நாம் கையாள வேண்டிய நடைமுறைகளையும், எதிர்நோக்கும் சவால்களையும் தாய்மையுண்ர்வுடன் நடந்து கொண்டு, மனம் தளராது பாடுபட வேண்டும். மாணவர்களின் வளர்ச்சியும் பாராட்டுதலுமே தமிழில்  நன்னூல் எழுதிய இலக்கணி பவணந்தி முனிவர் கூறும் நல்லாசிரியர்க்குரிய பண்புகளாகும் என்று குறிப்பிட்டார். கல்லூரி முதல்வர்(பொ) முனைவர் மு.மீனா அவர்கள் தன்னலம் கருதாத சேவை மனப்பான்மை நமக்கும் நம் நிறுவனத்திற்கும் பெருமை சேர்க்கும் என்று குறிப்பிட்டார். கல்லூரிப் பேராசிரியர்கள் அனைவரும் நற்பணியாற்றிட உறுதிமொழி எடுத்துக் கொணடனர்.




கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக